Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

முளைகட்டிய நவதானிய சூப்


தேவையானவை:

முளைகட்டிய பயறுகள் - ஒரு கப்,         வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,                                                      சீரகம் - ஒரு டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,                    மிளகு - காரத்துக்கேற்ப,
கொத்தமல்லி தழை - தேவையான அளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய் பால் - 1 கப்                                    
புளிக்காத கெட்டி தயிர் - அரை கப்,        உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* முளைகட்டிய பயறுகளை வேகவைத்துக் கொள்ளவும்.

* மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* காடாயில் எண்ணெயை காய வைத்து, அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் மீதமுள்ள வேக வைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய் பால் சேர்த்து, கொதி வரும் போது அடுப்பை அணைத்துவிடவும்.

• பரிமாறுவதற்கு முன் எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Followers

Comments Please...